×

புதுச்சேரியில் வாடகைக்கு வீடெடுத்து கொள்ளையில் ஈடுபட்டு வந்த சென்னையை சேர்ந்த திருடர்களை கைது செய்து போலீசார் அதிரடி நடவடிக்கை!!!

புதுச்சேரி: புதுச்சேரியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி கொள்ளையில் ஈடுபட்டு வந்த சென்னையை சேர்ந்த 2 கொள்ளையர்களை போலீசார் சிசிடிவி உதவியுடன் கைது செய்துள்ளனர். புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக பூட்டி கிடக்கும் வீடுகளை குறிவைத்து கொள்ளையடிப்பது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வெங்கட்டா நகர் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ரெஜீனா பேகம் என்பவரின் வீட்டில் 140 சவரன் தங்க நகைகள் மற்றும் லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை கொள்ளையர்கள் திருடி சென்றனர். இந்நிலையில் கொள்ளையர்கள் தப்பி சென்ற காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இதனையடுத்து கேமராவை போலீசார் ஆய்வு செய்ததில் மர்மநபர் ஒருவர் கொள்ளையடித்த பொருட்களை பை ஒன்றில் வைத்து சுவர் ஏறி குதிப்பது தெரியவந்துள்ளது. பின்னர் போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனைத்தொடர்ந்து, கொள்ளையில் ஈடுபட்டவர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கொள்ளையர்கள் சுரேஷ் மற்றும் ஸ்ரீதரை கைது செய்துள்ள போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணையானது மேற்கொள்ளப்பட்டு வந்தது. அப்போது அதில் கடந்த 2 மாதங்களுக்கு முன் புழல் சிறையிலிருந்து வெளியே வந்த சுரேஷ் புதுச்சேரியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி கொள்ளையடித்து வந்தது தெரியவந்துள்ளது. பின்னர் இவருடன் ஸ்ரீதரும் இணைந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

Tags : thieves ,Chennai ,house ,Pondicherry ,robbers , Puducherry, rent, robbery, arrest
× RELATED செங்கல்பட்டு அருகே ஊராட்சிமன்ற...