×

மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் பாமக கேவியட் மனு

புதுடெல்லி: மருத்துவ் படிப்பில்ஓ.பி.சி.க்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி திமுக, தமிழக அரசு, அதிமுக, பாமக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திராவிடர் கழகம் ஆகிய கட்சிகளின் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு–் தொடரப்பட்டது. இதைவிசாரித்த நீதிமன்றம், புதிய சட்ட வரையறைகளை உருவாக்கி, 3 மாதங்களில் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று  தீர்ப்பளித்தது. மேற்கண்ட உத்தரவு பிறப்பித்த விவகாரத்தில் கடந்த மாதம் 28ம் தேதி திமுக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து தற்போது பாமகவை சாரபில் அன்புமணியும் உச்ச நீதிமன்றத்தில் நேற்று கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், மருத்துவப் படிப்பில் ஓ.பி.சி பிரிவினருக்கு 50சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டால் எங்களது தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என குறிப்பிட்டுள்ளார்.


Tags : Supreme Court , Medical Studies, Reservation, Supreme Court
× RELATED முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது...