×

தமிழகத்தில் இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில்கள் ஆகஸ்ட் 15-ம் தேதி வரை ரத்து: தெற்கு ரயில்வே

சென்னை: தமிழகத்தில் இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில்கள் ஆகஸ்ட் 15-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று ஆகஸ்ட் 15 வரை சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருச்சி - செங்கல்பட்டு, மதுரை - விழுப்புரம், அரக்கோணம் - கோவை சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கோவை - மயிலாடுதுறை, திருச்சி - நாகர்கோவில், கோவை - காட்பாடி சிறப்பு ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது.

கொரோனா ஊரடங்கால் ரயில் சேவை முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பின்னர் ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டதையடுத்து, தமிழகத்துக்குள் சில சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் தற்போது சிறப்பு ரயில்கள் ஆகஸ்ட் 15-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த ரயில்களுக்கு முன்பதிவு செய்த பயணிகளுக்கு கட்டணம் முழுமையாக திருப்பி வழங்கப்படும். சென்னை சென்ட்ரல் - டெல்லி இடையேயான ராஜ்தானி சிறப்பு ரயில் வழக்கம் போல இயக்கப்படும் என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : Tamil Nadu ,cancellation ,Southern Railway , Special trains, cancellation
× RELATED கோடை விடுமுறையை முன்னிட்டு 19 சிறப்பு...