சென்னை: தலைவர்கள், தமிழறிஞர்கள், சிலைக்கு மரியாதை செலுத்துவது தொடர்பாக அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. ஊரடங்கு காலத்தில் தலைவர்கள் சிலைகளுக்கு மரியாதை செலுத்துவது பற்றி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சமூக இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்றி மாவட்ட ஆட்சியருடன் சேர்ந்து மரியாதை செலுத்தலாம். மரியாதை செலுத்தப்படும் தலைவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 5 பேருக்கு மிகாமல் பங்கேற்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.