டெல்லி: பல்கலைக்கழக இறுதியாண்டு, செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யக் கோரிய மனுக்கள் தொடர்பாக இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.பல்கலைக்கழக இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் தொடர்பான வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 10ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் இன்று ஒத்தி வைத்தது. இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று 31 மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.