டெல்லி: பறவைகள் (ரஃபேல்) அம்பாலாவில் பாதுகாப்பாக தரையிறங்கியது என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டிவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். இராணுவ வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கம் ரஃபேல் போர் விமானங்கள். இந்த மல்டிரோல் விமானங்கள் இந்திய விமானபப்டையின் திறன்களில் புரட்சியை ஏற்படுத்தும் எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.