அம்பாலா: இந்திய வான் எல்லைக்குள் நுழைந்த 5 ரஃபேல் போர் விமானங்களுக்கு ரேடியோ சிக்னல் மூலம் வரவேற்பு அளிக்கப்பட்டது. 2 மணிக்கு ஹரியானாவில் அம்பாலா விமானப்படை பிரிவில் ரஃபேல் போர் விமானங்கள் சேர்க்கப்படுகின்றன. பிரான்சில் இருந்து புறப்பட்ட 5 ரபேல் போர் விமானங்கள், அரியானாவில் உள்ள அம்பாலா விமான படைத்தளத்தை இன்று வந்தடைகின்றன. இதையொட்டி, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விமானங்களை புகைப்படம், வீடியோ எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.