×

குட்கா கடத்திய 2 பேர் கைது

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த வல்லூர் 100 அடி சாலையில் மீஞ்சூர் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சென்னையில் இருந்து மீஞ்சூர் நோக்கி வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 3 ஆயிரம் குட்கா பாக்கெட்டுகள் இருந்தன. அதன் மதிப்பு ரூ.1 லட்சம். இதையடுத்து, குட்கா கடத்தி வந்ததாக சென்னை மணலி புதுநகரை சேர்ந்த ராம் கண்ணன் (35), தண்டையார்பேட்டையை சேர்ந்த விஜயகுமார் (34) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து குட்காவை பறிமுதல் செய்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.


Tags : kidnappers , Gutka, kidnapper, 2 people, arrested
× RELATED ரூ1 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டை வேர்கள் சிக்கியது: கடத்திய 4 பேர் கைது