சென்னை: நடிகை வனிதாவின் திருமணம், தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் சமூக வலைதளங்களில் அவதூறாக பேசி வீடியோ பதிவு செய்த சாலிகிராமத்தை சேர்ந்த நடிகை சூர்யாதேவி (27) என்பவரை கடந்த வாரம் வடபழனி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். அப்போது சூர்யாதேவிக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதைதொடர்ந்து, மாநகராட்சி சுகாதாரத்துறை ஆய்வாளர் ரமேஷ், சூர்யா தேவி வீட்டிற்கு சென்றபோது, அவர் இல்லை, வீடும் பூட்டியிருந்தது. இது குறித்த புகாரின் பேரில், விருகம்பாக்கம் காவல் போலீசார் சூர்யா தேவி மீது பேரிடர் மேலாண்மை சட்டம், 188, 269 ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.