×

மணிக்கு 50 கிமீ வேகத்தில் சுழட்டி அடிக்க போகும் சூறாவளி... கோவை, நீலகிரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை : தமிழகத்தில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். மேலும் நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்காக எச்சரிக்கை :

இன்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

இன்றும் நாளையும் தெற்கு குஜராத், வடக்கு மகாராஷ்டிரா கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஜூலை 28 : தெற்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

ஆகவே அடுத்த 5 நாட்களுக்கு தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கடும் என்பதால் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம். இதில் அதிகபட்ச வெப்பநிலை 36டிகிரியும்  குறைந்தபட்சம் 26 டிகிரி செல்சியஸாக இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்படியாக திருக்கழுக்குன்றத்தில் 4 செ.மீ. மழையும், காட்பாடியில் 3 செமீ மழையும் பெய்துள்ளது. 


Tags : Nilgiris ,districts ,Coimbatore , Meteorological Center, Rain, Fishermen, Coimbatore, Nilgiris
× RELATED கோவையில் இருந்து நீலகிரிக்கு 40 சிறப்பு பஸ்