சென்னை: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி போலீசில் புகார் அளித்துள்ளார். சீமான் மீது நடவடிக்கை எடுக்குமாறு அடையாறு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். சமூக வலைத் தளங்களில் தன்னைப் பற்றி அவதூறாக சீமான் கருத்து பதிவிட்டு வருவதாக அவர் புகாரில் தெரிவித்துள்ளார்.