×

4 வது வாரமாக முழு ஊரடங்கு பயணிகள் வருகை குறைவு வெறிச்சோடியது ஏர்போர்ட்

சென்னை: கொரோனா பரவலை கட்டுப்படுத்த இம்மாதம் 4வது ஞாயிறு முழு ஊரடங்கு காரணமாக சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. சென்னை உள்நாட்டு முனையத்தில் வழக்கமாக சுமார் 6 ஆயிரத்துக்கும் அதிகமான பயணிகள் பயணிப்பார்கள். நேற்று சென்னையிலிருந்து புறப்பட்ட 29 விமானங்களில் சுமார் 2 ஆயிரம் பேரும், சென்னைக்கு வரும் 29 விமானங்களில் 2,600 பேரும் என மொத்தம் 4,600 பயணிகள் மட்டுமே முன்பதிவு செய்திருந்தனர். அதிலும் குறிப்பாக சென்னையிலிருந்து கோவை விமானத்தில் 8 பேரும், திருவனந்தபுரத்திற்கு 11, திருச்சிக்கு 17, மதுரைக்கு 23,டெல்லிக்கு 33 பேர் மட்டுமே முன்பதிவு செய்துள்ளனர். சென்னைக்கு வரும் விமானங்களிலும் பல விமானங்கள் குறைந்த பயணிகளே இருந்தனர்.இதனால் சென்னை உள்நாட்டு விமான நிலையம் பயணிகள் கூட்டமில்லாமல் நேற்று வெறிச்சோடி காணப்படுகிறது.

Tags : airport ,curfew passenger desert , 4th week, full curfew, passenger, low attendance, deserted, airport
× RELATED அதிக பயணிகள் கையாண்டதில் சென்னை விமான நிலையம் 3வது இடம்