×

அனுமன் மந்திரத்தை தினமும் சொன்னால் கொரோனா ஓடிடும்: பெண் எம்பி புதிய யோசனை

போபால்: மத்தியப் பிரதேச மாநிலம், போபால் தொகுதி பாஜ எம்பி பிரக்யா தாகூர். பெண் சாமியாரான இவர், அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்துபவர். இந்நிலையில், கொரோனாவை நாட்டை விட்டு விரட்டுவதற்கான புதிய யுக்தியை அவர் நேற்று கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘நாடு முழுவதும் உள்ள இந்துக்கள் வரும் 5ம் தேதி வரை தமது வீடுகளில் நாள்தோறும் 5 முறை அனுமன் மந்திரத்தை ஜெபிக்க வேண்டும்.

ஆகஸ்ட் 4ம் தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வரவுள்ளது. 5ம் தேதி ராமர் கோயிலுக்கான பூமி பூஜை தொடங்கும். அந்த 5ம் தேதி இந்த அனுமன் மந்திர ஜெபமும் முடிவுக்கு வரும். இந்த நாளை நாம் தீபாவளி போன்று கொண்டாட வேண்டும். நாடு முழுவதும் உள்ள இந்துக்கள் ஒருசேர அனுமன் மந்திரத்தை ஒரே குரலில் ஜெபிக்கும்போது, அது கண்டிப்பாக பலனை தரும். கொரோனா வைரசில் இருந்து நாம் விடுபடலாம். இது, ராமருக்கான உங்களின் பிரார்த்தனையாகும்,’ என கூறியுள்ளார்.

Tags : Hanuman ,Corona , Hanuman Mantra, daily say, corona run, female MP, new idea
× RELATED தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை:...