×

கழுத்தை அறுத்து தாய் படுகொலை: மகன் கைது

ஸ்ரீபெரும்புதூர்: குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தாயை கழுத்தை அறுத்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்துள்ளனர். ஸ்ரீபெரும்புதூர் அருகே கீவளூர் கிராமம், பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்தவர் துரை (60) கூலி தொழிலாளி. இவரது மனைவி கோவிந்தம்மாள் (58). இவர்களது மகன் ஆனந்தன் (33). ஆனந்தனுக்கு திருமணமாகி மனைவி, பெண் குழந்தை உள்ளனர். ஆனந்தன் குடித்துவிட்டுவந்து மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்வதால் கோபித்துக்கு கொண்டு தனது தாய்வீட்டுக்கு 6 மாதத்துக்கு முன்பு சென்றுவிட்டார். மேலும் ஆனந்தன் சற்று மனநிலை சரியில்லாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை வேலை முடிந்து துரை வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, கோவிந்தம்மாள் கழுத்து அறுக்கப்பட்டு ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த துரை, ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணையில் கோவிந்தம்மாளுக்கு அடிக்கடி உடல் சரியில்லாமல் போய்விடுமாம். அப்போது ஆனந்தன்தான் கோவிந்தமாளை மருத்துவனைக்கு அழைத்து சென்றுவிட்டு வருவார். இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்தபோது ஆனந்தனுக்கும் கோவிந்தம்மாளுககும் இடையே தகராறு  ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ஆனந்தன் தனது தாயை கழுத்தை அறுத்தை கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஆனந்தனை போலீசார் கைது செய்து விசாரித்தனர். குடிபோதையில் தாயை கொலை செய்ததாக ஆனந்தன் கூறியுள்ளார். மேலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Tags : Beheading, mother murder, son, arrested
× RELATED கல்வி உதவித் தொகை வாங்கித் தருவதாக...