பெரம்பூர்: வியாசர்பாடி ஜீவா பகுதியில் முழு ஊரடங்கை மீறி, நேற்று ஏராளமானோர் சைக்கிளில் உலா வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போக்குவரத்து போலீசார் வாகன சோதனை நடத்தி நூற்றுக்கும் மேற்பட்டோரின் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். இதேபோல், 145 பைக்குகளும் பறிமுதல் செய்யப்பட்டன.