×

கம்பெனி அதிபர் வீட்டில் கொள்ளை உறவினர் உள்பட 6 பேர் கைது: 13 லட்சம், 18 சவரன் பறிமுதல்

அம்பத்தூர்: அம்பத்தூர் அடுத்த பாடி, சீனிவாச நகரை சேர்ந்தவர் செல்வம் (32), கம்பெனி அதிபர். இவரது மனைவி சிந்து (26). கடந்த 14ம் தேதி இவரது வீட்டின் கதவு எரிக்கப்பட்டு, பீரோவில் இருந்த 19 லட்சம், 22 சவரன் நகைகள் கொள்ளை போனது. போலீசார் விசாரணையில், செல்வத்தின் மைத்துனரான பெசன்ட் நகர், வேளாங்கண்ணி தெருவை சார்ந்த குமாரவேல் (23) என்பவர், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து, குமாரவேல் மற்றும் அவரது கூட்டாளிகளான அதே பகுதி அண்ணா காலனியை சேர்ந்த தினேஷ்குமார் (20), ஓடைமான் நகரை சார்ந்த கல்லூரி மாணவன் ராகுல் டேவிட் (20), எல்லையம்மன் கோயில் தெருவை சார்ந்த கல்லூரி மாணவன் ஹரிஷ் குமார் (19), கோட்டூர், வெஸ்ட் கெனால் பங்க் சாலையை சேர்ந்த கல்லூரி மாணவன் அரவிந்த் (20) திருவான்மியூர் ராஜா சீனிவாசன் நகரை சேர்ந்த நித்யானந்தம் (21) ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.   அவர்களிடம் இருந்து 13 லட்சம் ரொக்கப்பணம், 16 சவரன் தங்க நகைகள், ஒன்றரை லட்சம் மதிப்புள்ள 2 விலை உயர்ந்த செல்போன்கள்,  2 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


Tags : house ,company boss , Company President, robbery, arrested
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்