×

மதுபாட்டில் கூடுதல் விலைக்கு விற்பனை: டாஸ்மாக் கடையை குடிமகன்கள் முற்றுகை: திருப்போரூரில் பரபரப்பு

திருப்போரூர்: திருப்போரூர் டாஸ்மாக் கடையில், மதுபாட்டில்களை, கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக கூறி, கடையை முற்றுகையிட்டு குடிமகன்கள் போராட்டம் நடத்தினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. திருப்போரூர் - இள்ளலூர் சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு, கடைக்கு தொடர்பு இல்லாத வெளிநபர்கள் மூலம் கூடுதல் விலைக்கு மது விற்கப்படுவதாக கடந்த சில நாட்களுக்கு முன் சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது. தற்போது, டாஸ்மாக் கடையில் உள்ள ஊழியர்களே, மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.

இதையடுத்து, குடிமகன்கள், கூட்டம் கூட்டமாக வந்து, மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். அப்போது, கடை ஊழியர்கள், ஒரு குவாட்டர் பாட்டிலுக்கு 20, அரை பாட்டிலுக்கு ₹50 கூடுதலாக கேட்டதாக தெரிகிறது. இதனால் குடிமகன்கள் ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால், உயர் அதிகாரிகள் கூறியுள்ள விலைக்குத்தான் விற்க முடியும் என்று ஊழியர்கள் தெரிவித்தனர். இதனால், மது வாங்க வந்த 20க்கும் மேற்பட்டோர் கடை முன்பு நின்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை கண்டித்து கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஊழியர்கள் அச்சமடைந்து, அவர்களை சமாதானப்படுத்தி, அனுப்பி வைத்தனர்.

Tags : store ,Thiruporur ,Citizens ,Tasmac , Madhupattil, Sales, Tasmac Store, Thiruporur
× RELATED தாம்பரம் அருகே உணவகத்தில் தீ விபத்து..!!