சென்னை: விவசாய நிலங்களை பாழாக்கும் காட்டுப் பன்றிகளை சுட்டுக் கொல்ல வனத்துறைக்கு அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது. காட்டுப் பன்றிகளை சுட்டுக் கொல்ல தி.மலை, திருப்பத்தூர், ஓசூர், கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட 8 வனக்கோட்ட வனத்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் விளக்கத்தை ஏற்று பயிர்களை காக்கும் நடவடிக்கை தொடர வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.