புதுச்சேரி: புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் உள்ள மரத்தடியில் பேரவைக் கூட்டம் நடத்தப்படுகிறதும் என சபாநாயகர் தெரிவித்தார். அவை அரங்குக்கு வெளியே திறந்த வெளியில் புதுவை சட்டமன்ற கூட்டம் நடப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. என்.ஆர்.காங். எம்.எல்.ஏ ஜெயபாலுக்கு கொரோனா உறுதியானதால் அரங்குக்கு வெளியே பேரவைக் கூட்டம் நடைபெறும் என கூறப்படுகிறது.