×

சீனாவுக்கு மீண்டும் செக் வைத்த இந்தியா.. சீனாவுக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக புதிய வர்த்தக கட்டுப்பாடுகளை விதித்தது மத்திய அரசு!!

டெல்லி : சீனா உட்பட இந்தியாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகள் உடனான வர்த்தக பரிமாற்றத்தில் மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ, உள்நாட்டு தேவைகளுக்காக இந்தியா, சீனாவை சார்ந்து இருக்கக் கூடாது என்று கருத்து தெரிவித்தார். இதையடுத்து சீனாவுக்கு நேரடி பாதிப்பை ஏற்படுத்தும் சில கட்டுப்பாடுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, இந்தியாவுக்கு பொருட்கள் ஏற்றுமதி மற்றும் கட்டுமான பணிகளுக்கு டெண்டர் கோர விரும்பும் அண்டை நாட்டு நிறுவனங்கள் அல்லது தனி நபர்கள் சம்பந்தப்பட்ட துறையில், பெயரை பதிவு செய்திருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.

மேலும் தகுதியான நிறுவனமா என்பதை வர்த்தக அமைச்சகம் முடிவு செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. பாதுகாப்பு அனுமதியை வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகத்திடம் இருந்து சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பெற வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது. டிசம்பர் 31ம் தேதி வரை கொரோனா தடுப்புக்கு மருந்து பொருட்களை வாங்குவது உட்பட வரையறுக்கப்பட்ட சிலவற்றில் விதிவிலக்கு அளிக்கப்பட்டது. லடாக் எல்லையில், சில பகுதிகளில் இருந்து சீன படைகள் பின்வாங்காமல் காலம் தாழ்த்துவதால், அந்நாட்டுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், புதிய வர்த்தக விதிகளை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இந்தியாவின் இந்த நடவடிக்கை சீன நிறுவனங்களை கடுமையாக பாதிக்கும் என கூறப்படுகிறது.

Tags : China ,India ,Central Government ,crisis ,government , China, Czech Republic, India, crisis, new trade restrictions, federal government
× RELATED சொல்லிட்டாங்க…