சென்னை: தங்கம் விலை நேற்று மீண்டும் சவரனுக்கு ரூ.592 உயர்ந்தது. அதே நேரத்தில் சவரன் ரூ.39 ஆயிரத்தை நெருங்க தொடங்யுள்ளது. இது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்னும் தங்கம் விலை உயர அதிக வாய்ப்புள்ளதாக நகை வியாபாரிகள் கூறியுள்ளனர். தங்கம் விலை கடந்த மார்ச் மாதம் முதல் உயர்ந்து வருறது. கடந்த 9ம் தேதி சவரன் ரூ.37,744க்கும் விற்கப்பட்டது. அதன்பிறகு விலை ஏறுவதும், இறங்குவதுமாக இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.56 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,773க்கும், சவரனுக்கு ரூ. 448 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38,184க்கு இது தங்கம் விலை வரலாற்றில் வரலாறு காணாத உச்சம்.
நேற்று முன்தினம் காலை நிலவரப்படி கிராமுக்கு ரூ.68 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,785க்கும், சவரனுக்கு ரூ.544 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38,280க்கும் விற்கப்பட்டது. நேற்று மீண்டும் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து, புதிய வரலாற்று சாதனையை படைத்தது.அதாவது நேற்று தங்கம் கிராமுக்கு ரூ.74 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,847க்கும், சவரனுக்கு ரூ.592 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38,776க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை 39 ஆயிரத்தை நெருங்கி வருவது நகை வாங்குவோருக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1ம் தேதி(சவரன் ரூ.37,472) முதல் நேற்று வரை சவரனுக்கு ரூ.1304 அளவுக்கு தங்கம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
குறுய நாட்களில் இந்த அளவுக்கு தங்கம் விலை உயர்ந்தது இல்லை. தற்போதைய விலையையே தாங்கி கொள்ள முடியாத நிலையில் நகை வாங்குவார் இருந்து வருன்றனர். அதே நேரத்தில் இன்னும் தங்கம் விலை அதிகரிக்க தான் அதிக வாய்ப்புள்ளதாக நகை வியாபாரிகள் அதிர்ச்சி அடைய வைத்துள்ளனர். இது குறித்து சென்னை தங்கம், வைரம் நகை வியாபாரிகள் சங்கம் தலைவர் ஜெயந்திலால் கூறியதாவது: தங்கத்தில் முதலீடு செய்வது தான் விலை உயர்வுக்கு முக்ய காரணம். இது தவிர வேறு ஒன்றும் இல்லை. ஏனென்றால் எல்லாம் நாடுகளிலேயும் பொருளாதாரம் மந்தமான சூழ்நிலையில் உள்ளது.இதனால் மற்ற பொருளாதார பங்கு சந்தைகளில் முதலீடு செய்யாமல் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து வருறது. இது தான் புதிய உச்சத்துக்கு காரணம். மீண்டும் தங்கம் விலை புதிய உச்சத்தை தொடும்.
வெள்ளியை பார்த்தீர்கள் என்றால் கடந்த ஒரு வாரத்தில் கிலோ ரூ.7000 அதிகரித்துள்ளது. கிராமுக்கு ரூ.7 அதிகரித்துள்ளது. இது அபரிதமான விலை உயர்வாகும். தங்கத்தின் மீது எப்படி முதலீடு செய்து வருறார்களோ?, அதே போல மற்ற உலக நாடுகளில் வெள்ளியின் மீதும் முதலீடு செய்து வருன்றனர். தற்போதைய சூழ்நிலையில் வெள்ளியின் மீது முதலீடு அதிகரித்து வருறது. இதுவும் வெள்ளி விலை உயர்வுக்கு காரணம் ஆகும். இதனால் தங்கம், வெள்ளி விலை வரும் நாட்களில் தினம், தினம் புதிய உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்றோம். இவ்வாறு அவர் கூறினார்.