திருமலை: ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், திருப்பதி சின்னகாப்பு வீதியை சேர்ந்தவர் வெங்கடாசலம், தக்காளி வியாபாரி. இவரது மனைவி சரஸ்வதி. 13 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தனர். 8 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், அதேபகுதியை சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் வெங்கடாசலத்துக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. நாளடைவில் கள்ளக்காதலி வீட்டிலேயே தஞ்சமடைந்துள்ளார். ஆனால், மனைவியிடம் தொழில் சம்பந்தமாக வெளியூர் சென்று வருவதாக கூறி ஏமாற்றியுள்ளார். பின்னர், கணவனின் கள்ளக்காதலை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். கள்ளக்காதலி வீட்டிலேயே தங்கிய கணவரிடம், குழந்தையுடன் சென்ற சரஸ்வதி தங்களுடன் வருமாறு அழைத்துள்ளார்.
அவரை வெங்கடாசலம் விரட்டியடித்தார். மேலும்,சரஸ்வதி தங்களை தொல்லை செய்வதாக நேற்றுமுன்தினம் திருப்பதி கிழக்கு காவல் நிலையத்துக்கு வெங் கடாலசத்துடன் சென்று கள்ளக்காதலி புகார் கொடுத்தார். இதையறிந்த சரஸ்வதி, குழந்தையுடன் அங்கு சென்று தன்னுடன் வருமாறு கணவனை அழைத்தார். ஆனால், அவரை தள்ளிவிட்டு கள்ளக்காதலியுடன் அவர் பைக்கில் புறப்பட்டார். அப்போது, சரஸ்வதி சாலையில் அமர்ந்து கதறி அழு்தார். குழந்தை ‘டாடி, டாடி’ என கதறி அழுதாள். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், ‘டிஷா’ பெண் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சரஸ்வதி சென்றார். அங்கும் போலீசார் புகாரை மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.