×

ராணுவ வீரர் வீட்டிற்கே பாதுகாப்பில்லை!: சிவகங்கை அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வீட்டில் 25 சவரன் நகை கொள்ளை!!

சிவகங்கை: சிவகங்கை அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வீட்டில் கத்தியை காட்டி மிரட்டி 25 சவரன் நகை மற்றும் 80 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை முகமூடி கொள்ளையர்கள் பறித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிங்கமனூரை அடுத்த மருதிப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த நாகசுந்தரம் என்பவரது வீட்டில் இந்த துணிகரம் நடந்துள்ளது. வீட்டின் பின்புறம் வழியாக நுழைந்த மர்மநபர்கள் 7 பேர், குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினர்.

தடுக்க முயன்ற நாகசுந்தரத்தின் மகன் வெங்கடேஷ்வரனை கொள்ளையர்கள் தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். தொடர்ந்து பதறிப்போன நாகசுந்தரத்தின் குடும்பத்தினர், தாங்கள் அணிந்திருந்த நகைகளை கயற்றி கொடுத்துள்ளனர். மேலும் பீரோவில் வைத்திருந்த 80 ஆயிரம் ரூபாய் பணத்தையும் எடுத்து கொடுத்தனர். அதை பெற்றுக்கொண்ட கொள்ளையர்கள், கயற்ற முடியாத மோதிரம் ஒன்றினை சோப்பு நீரை கொண்டு கயற்ற செய்து பறித்து சென்றனர்.

மேலும் வீட்டில் இருந்த சி.சி.டி.வி. மற்றும் ஹார்ட் டிஸ்க்கையும் கொள்ளையர்கள் எடுத்து சென்றனர். இதனால் கொள்ளையரை அடையாளம் காண்பதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இதேபோல அதேபகுதியில் கடந்த வாரம் நகைக்காக இரட்டைக்கொலை நடந்தது. அந்த வழக்கில் இதுவரைக்கும் துப்பு கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர். இப்படி அடுத்தடுத்து தொடரும் கொள்ளைகளால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Tags : soldier ,house ,home ,Sivagangai ,jewelery ,Army , Army soldier ,jewelery robbed ,soldier's house ,Sivagangai.
× RELATED இந்த ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருக்கிறதா?