×

புதுகை அருகே துயர சம்பவம் இறப்பதற்கு முன்னரே கண்ணீர் அஞ்சலி போஸ்டர்: வாட்ஸ்அப்பில் அனுப்பி உயிரை மாய்த்த வாலிபர்

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பாத்திமா நகரை சேர்ந்த சின்னக்கருப்பன் மகன் சதீஷ்குமார்(19). இவர் ஐடிஐ 2ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 18ம் தேதி குடும்ப பிரச்னையால் அவரது தந்தை மற்றும் சகோதரர் உள்ளிட்டோர் சதீஷ்குமாரை திட்டியதோடு, அடித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சதீஷ்குமார் தன் படத்தை வைத்து தனக்குத் தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்றை டிசைன் செய்து, அதனை தனது நண்பர்கள் 4 பேருக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பிவிட்டு தலைமறைவாகி உள்ளார். மறுநாள் 19ம் தேதி அன்று தனது ஊரின் அருகே உள்ள ஒரு தோட்டத்தில் உள்ள பலாமரத்தில் சதீஷ்குமார் தூக்கிட்டு சடலமாக தொங்கியதை குடும்பத்தினர், உறவினர்கள் கண்டனர். பின்னர், உருமநாதபுரம் மயானத்தில் இறுதி காரியங்கள் செய்து எரித்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : death ,Budugai ,Pudukai , Reconciliation, Tragedy, Tear Tribute Poster, WhatsApp, Volleyball
× RELATED பாட்னா ரயில் நிலையம் அருகே ஓட்டலில்...