அஸ்ஸாம்: அஸ்ஸாமில் எண்ணெய் குழாய் வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் வெளிநாட்டு வல்லுநர்கள் மூவர் படுகாயம் அடைந்தனர். டின்சுகியா மாவட்டத்தில் பாக்ஜனில் உள்ள கிணறு எண் 5 அருகே விபத்து நேரிட்டது. அப்போது பற்றிய தீ மலமல என்று மற்ற இடங்களுக்கும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. அதனால் அந்த இடம் முழுவதும் தீக்காடு போல காட்சியளித்தது.
உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டனர். அப்போது மூன்று வெளிநாட்டு வல்லுநர்கள் உட்பட தீக்காயம் அடைந்த அனைவரும் மருத்துவமனைக்கு சிகிச்சைகாக கொண்டு செல்லப்பட்டனர். இதனையடுத்து விபத்து குறித்தும் போலீசார் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறது.
இதற்கு முன்னாள் கடந்த மாதம் 7-ம் தேதி இதே இடத்தில் நிகழ்ந்த எண்ணெய் குழாய் வெடி விபத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்புத் துறையினர் பல நாட்கள் போராடி வந்தனர். அப்போது தீயணைப்பு வீரர்களை சிலர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.