×

எள் நியாயமான விலையில் கொள்முதல் செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் கடந்த ஆண்டு நிலக்கடலை விலை கிலோ ரூ.63 ஆக இருந்தது. இந்தாண்டு விலை கிலோ ரூ.55 ஆக குறைந்துவிட்டது. அதேபோல உளுந்து விற்பனை விலை கிலோவிற்கு ரூ.60 முதல் 65 வரை மட்டுமே கிடைக்கிறது. கொரோனாவால் நியாயமான விலை கிடைக்காதது, விவசாயிகளுக்கு ஏமாற்றத்தையும் இழப்பையும் தருகிறது. ஆகவே எள், நிலக்கடலை, உளுந்து போன்ற விளைபொருட்களை நியாயமான, கட்டுப்படியான விலைக்கு, அரசே கொள்முதல் செய்ய வேண்டும்.

Tags : GK Vasan , Sesame fair price, purchase, GK Vasan, insistence
× RELATED கோடைகாலத்தில் தமிழக மக்களின் தண்ணீர்...