×

ஆன்லைன் மூலம் மதிமுக ஆலோசனை கூட்டம்: வைகோ பங்கேற்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட மதிமுக செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்ஆன்லைன் மூலம் மாவட்ட செயலாளர் டி.ஆர்.ஆர். செங்குட்டுவன் தலைமையில் நடைபெற்றது. இதில், நிர்வாகிகள் பூவை மு.பாபு, வக்கீல் ரா.அருணாச்சலம், ஆவடி ரா.அந்தரி, அட்கோ மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆலோசனை கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆன்லைன் மூலம் ஒன்றிய, நகர செயலாளர்களுடன் ஒன்றிய, நகர செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில், பூந்தமல்லி குமணன்சாவடி பகுதியில் கன்டோன்மென்ட் சொந்தமான மூன்று ஏக்கர் சத்திரம் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த இடத்தில் பெண்கள் அரசு கல்லூரி கட்டித் தருதல், ஆவடி மாநகராட்சியில் கிடப்பில் கிடக்கும் பாதாள சாக்கடை திட்டத்தை உடனே துவங்கிட வேண்டும், துறைமுகத்துக்கு செல்லும் மூன்றாவது வட்ட வடிவ சாலை  நிறைவு பெறாமல் உள்ளது.  அப்பணியை  துரிதப்படுத்துதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags : counseling meeting ,Waiko , Online, Madhyamaka, Consultative Meeting, Vaiko Participation
× RELATED எடப்பாடி, ஓபிஎஸ், செல்வப்பெருந்தகை,...