×

கேரளாவில் இன்று மேலும் 794 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று மேலும் 794 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட தகவலின் படி, கேரளாவில் இன்று ஒரேநாளில் 794  பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 13,274 ஆக உயர்ந்துள்ளது. கொரானா தொற்றிலிருந்து 245 பேர் குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் 14,640 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

Tags : Kerala , Kerala, Corona, sure
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...