×

காளையார்கோவிலில் ரோடுகளில் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீர்

காளையார்கோவில்: காளையார்கோவில் ஊராட்சியில் அனைத்து ரோடுகளிலும் சிறு மழைக்கே தண்ணீர் தேங்கி நிற்கிறது. பல வருடங்களாக ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாததால் இதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.
காளையார்கோவில் காளீஸ்வரர் கோயில் எதிர்புரம் சன்னதி தெரு செல்லும் சிமென்ட் ரோடு பல ஆண்டுகளுக்கு முன்னாள் போடப்பட்டது. அந்த ரோட்டின் வழியாக கிராம நிர்வாக அலுவலகம், சமுதாயக் கூடம் மற்றும் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் 1500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்படுத்தி வரும் பிரதான சிமென்ட் சாலை உள்ளது. இச்சாலையில் சிறு மழை பெய்தால் கூட குளம்போல் தண்ணீர் தேங்கி விடுகின்றது இதனால் அப்பகுதி பொதுமக்கள் பாதிப்படைந்த வருகின்றனர்.

இதேபோல திருநகர், கிருஷ்ணாநகர் சோமசுந்தரநகருக்கு செல்லும் சிெமன்ட் ரோடு உள்பட காளையார்கோவிலில் உள்ள தெருக்களில் 10 வருடங்களுக்கு முன்னால் போடப்பட்ட சாலைகள் தற்போது சாலைகள் இருந்த இடமே தெரியாமல் ஜல்லிகள் மட்டுமே தெரிகின்றன.
மேலும் ஒவ்வொரு தெருக்களிலும் 10 மீட்டருக்கு ஒரு இடத்தில் ரோடு கடுமையாக சேதம் ஏற்பட்டுள்ளது. தற்போது பெய்த சிறு மழைக்கே ரோட்டை பயன்படுத்த முடியாத அளவுக்கு மாறிவிடுகின்றது.

பள்ளி வாகனம், இருசக்கர வாகனங்கள் விபத்துக்களைச் சந்திக்கும் சூழ்நிலை ஏற்படுகின்றது மேலும் நடந்து செல்பவர்களின் பாதங்களை ஜல்லி கற்கள் பதம் பார்க்கின்றன. அவசர காலங்களில் பயன்படுத்தவே முடியாத சாலைகளாக உள்ளது.  இதுபோன்று நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் உள்ள சிெமண்ட் மற்றும் தார் பெயர்ந்து மேடு பள்ளமாக உள்ளது. சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : roads ,Kaliningrad , Rainwater, Kaliningrad
× RELATED திட்டப்பணியால் போக்குவரத்து பாதிப்பு