டெல்லி: தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு பொதுமக்கள் அல்லது அமைப்புகள் நிதி வழங்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இணைய வழி மூலமாகவோ அல்லது காசோலை மூலமாகவோ நிதி வழங்கலாம். பாரத ஸ்டேட் வங்கி கணக்குக்கு நிதியை அனுப்பலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. உள்துறை அமைச்சக இணையதளம் மூலமாகவும் நிதி அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.