×

உத்திரமேரூர் அருகே 14 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்த சிறுவன் கைது

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே 14 வயது சிறுமியை கடத்தி செய்தி திருமணம் செய்தி 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். உத்திரமேரூர் அடுத்த பென்னலூர் கிராம இருளர் குடியிருப்பை சேர்ந்தவர் ரவி. அவரது 14 வயது மகளை நேற்று முன்தினம் தனது உறவினர் கடத்தி சென்றுள்ளதாக பெருநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் பெருநகர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் காஞ்சிபுரம் அருகே ஆர்ப்பாக்கம் கிராம இருளர் காலனியை சேர்ந்த முத்துக்குமார்(17) என்பவர் கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து ரவியின் மகளை மீட்ட பெருநகர் போலீசார் குழந்தைகள் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். 14 வயது பெண்ணை கடத்தி திருமணம் செய்த முத்துகுமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Uttiramerur ,kidnapping , Uthiramerur, 14-year-old girl, kidnapper, married, boy arrested
× RELATED பஞ்சாப்பில் வழிப்பறியில் ஈடுபட்ட நைஜீரியா, கானா நாட்டு பெண்கள் கைது