×

பட்டாக்கத்தியில் கேக்வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்: 8 பேர் கைது

பல்லாவரம்: பல்லாவரம் அடுத்த திருநீர்மலையில் பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். திருநீர்மலை, சரஸ்வதிபுரம், 2வது தெருவில் உள்ள பூங்கா ஒன்றில் கடந்த 14ம் தேதி பத்துக்கும் மேற்பட்ட வாலிபர்கள் ஒன்று சேர்ந்து, திருநீர்மலை, ரங்கா நகரை சேர்ந்த, ஆன்லைன் மூலம் காய்கறி விநியோகம் செய்யும் அருண் (24) என்பவரது பிறந்த நாளை கொண்டாடினர். அப்போது, அவர்கள் பட்டாக்கத்தியால் கேக் வெட்டினர். இது தொடர்பான புகைப்படங்கள் சங்கர் நகர் காவல் நிலையத்திற்கு கிடைத்தது. அதன் அடிப்படையில் சங்கர் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முகமது பரக்கதுல்லா தலைமையிலான போலீசார், விசாரித்தனர். இதுதொடர்பாக திருநீர்மலையை சேர்ந்த அருண் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Tags : Sword, cake, birthday, 8 people, arrested
× RELATED ரூ.4 கோடி பறிமுதல் செய்த வழக்கு நயினார்...