சென்னை :சமூக வலைதளங்களில் திமுகவுக்கு எதிரான தந்திர அரசியலை கட்சியினர் உணர்ந்து செயல்பட வேண்டும் என்று திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். யாருடைய மனதையும் புண்படுத்துவதும் இல்லை, யாருடைய நம்பிக்கைக்கும் திமுகவினர் எதிரானவர்கள் இல்லை என்றும் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், தமிழர்கள் முன்னேறிவிடக் கூடாது என நினைப்பவர்கள் காலங்காலமாகச் சொல்லி வந்த அவதூறுகள் இன்றைக்கு மீண்டும் இணையதளத்தில் பரவுகின்றன, என்றார்.