தூத்துக்குடி : சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.
காவலில் உள்ள 5 போலீசாரையும் சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
காவலர் முத்துராஜை நேற்று சாத்தான்குளம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.இன்று 5 போலீசாரையும் சம்பவம் தொடர்பான இடங்களுக்கு சிபிஐ அதிகாரிகள் அழைத்து செல்கின்றனர்.