×

ஒரே குடும்பத்தில் 5 பேருக்கு கொரோனா

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கும்மிடிப்பூண்டி ரயில்வே ஸ்டேஷன் சாலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 75 வயது மூதாட்டி, 25 வயது பெண், 80 வயது முதியவர், 45 வயது பெண், 23 வயது பெண் என 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் கும்மிடிப்பூண்டியில் கொரோனா தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 231 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை பகுதியில் 73 வயது மூதாட்டி கொரோனா தொற்று பாதித்த நிலையில் சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். தொடர்ந்து அவரது உடல் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி பாதுகாப்பாக கும்மிடிப்பூண்டிக்கு கொண்டு வரப்பபட்டு அவரது மத வழக்கப்படி அடக்கம் செய்யப்பட்டது.


Tags : Corona , Only family, 5 people, Corona
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...