சென்னை: புழல் சிறையில் உள்ள வெளிநாட்டு கைதிகள் 129 பேரை ஹஜ் சொசசைட்டிக்கு மாற்றப்பட உள்ளனர் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக கைதான 129 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே ஜாமின் வழங்கியது. ஜாமின் பெற்ற பிறகும் தங்களை விடுவிக்காமல் சிறை முகாமில் வைத்துள்ளதாக கூறி வழக்கு தொடர்ந்தனர்.