×

ஆவடி மாநகராட்சியில் கொரோனாவுக்கு வருவாய் ஆய்வாளர் பலி

சென்னை: ஆவடி மாநகராட்சியில் பணியாற்றி வந்த வருவாய் ஆய்வாளர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளார். இதனையடுத்து, அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு இழுத்து மூடப்பட்டது. ஆவடி மாநகராட்சியில் பணிபுரியும் 47 வயது நிரம்பிய வருவாய் ஆய்வாளர், கடந்த 3 மாதமாக தொற்று தடுப்பு நடவடிக்கை பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இதனையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு அவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பிறகு, அவர் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

பின்னர், அவர் கடந்த 10ம் தேதி இரவு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். வளசரவாக்கத்தில் வசித்து வந்தார். மனைவி, ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். ஆவடியில்  வருவாய் ஆய்வாளர் பலியானதை அடுத்து மாநகராட்சி அலுவலகம் இழுத்து மூடப்பட்டது. மேலும், அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. சக அதிகாரிகள், ஊழியர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Tags : Revenue Analyst ,Avadi Corporation ,Corona , Awadhi Corporation, Corona, Revenue Analyst, Kills
× RELATED உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ள...