காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் நாவலர் நெடுஞ்செழியன் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு அவரது திரு உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. காஞ்சிபுரம் திருக்கச்சி நம்பி தெருவில் உள்ள கலைஞர் பவளவிழா மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். திமுக மாணவர் அணி செயலாளரும் காஞ்சிபுரம் தொகுதி எம்எல்ஏவுமான எழிலரசன், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில், தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் செங்குட்டுவன், இளைஞரணி அமைப்பாளர் அப்துல் மாலிக், காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார், தெற்கு ஒன்றிய செயலாளர் குமணன், நகர அவைத்தலைவர் சந்துரு, துணைசெயலாளர்கள் கருணாநிதி, ஜெகநாதன், பொருளாளர் வெங்கடேசன், மலர்மன்னன், கமலக்கண்ணன் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
செங்கல்பட்டு: காஞ்சி வடக்குமாவட்ட திமுக சார்பில் நாவலர் நெடுஞ்செழியன் நூற்றாண்டு விழாவையொட்டி அவரது படத்திற்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி செங்கல்பட்டு புதியபேருந்து நிலையம் பெரியார் சிலை அருகே நடைபெற்றது. நகர திமுக செயலாளர் எஸ்.நரேந்திரன் தலைமை வகித்தார். காஞ்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் திமுக எம்.பி. ஜி.செல்வம், செங்கல்பட்டு திமுக எம்.எல்.ஏ.வரலட்சுமிமதுசூதனன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். நாவலர் நெடுஞ்ழியன் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். மாவட்ட துணைச்செயலாளர் விஸ்வநாதன், முன்னாள் நகரமன்ற தலைவர் அன்புச்செல்வன், ஆப்பூர் சந்தானம், சிலம்புசெல்வன், நகர திமுக நிர்வாகிகள் முனுசாமி, மண்ணு, ராஜி, சந்தோஷ், மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூடுவாஞ்சேரி: நாவலர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையோரத்தில் அவரது திருவுருவ படத்திற்கு திமுக சார்பில் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலை ஓரத்தில் நேற்று நடைபெற்றது.
போரூர் செயலாளர் வக்கீல் ஜி.கே.லோகநாதன் தலைமை தாங்கினார். முன்னதாக நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சி மன்ற முன்னாள் துணை தலைவர் கே.பி.ஜார்ஜ் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்.கே.டி.கார்த்திக் கலந்துகொண்டு நாவலர் திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். முன்னாள் பேரூராட்சி மன்ற வார்டு கவுன்சிலர்கள் பத்மநாபன், அப்துல்காதர், ஏ.எஸ்.தரணி, நிர்வாகிகள் டிஸ்கோகணேசன், பொன்தசரதன், ஜான்சிராணி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.