×

பூந்தமல்லி நகராட்சி ஊழியர்கள் 2 பேருக்கு கொரோனா

பூந்தமல்லி: பூந்தமல்லி நகராட்சி ஊழியர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பூந்தமல்லி நகராட்சி கமிஷனரின் கார் டிரைவர் மற்றும் சுகாதாரப்பிரிவில் பணிபுரியும் ஊழியர் என 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து நகராட்சியில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக நகராட்சி கமிஷனர் தனிமைப்படுத்திக் கொண்டார். மேலும் பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நேற்று வரை 23 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags : Corona , Municipality of Poonamallee, Staff, 2 persons, Corona
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...