×

மாவட்டத்தில் ஒரே நாளில் 308 பேருக்கு தொற்று: பலி எண்ணிக்கை 111 ஆக உயர்வு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை, 5,199 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில், நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் ஆவடி மாநகராட்சி, பூந்தமல்லி, திருவேற்காடு, திருவள்ளூர், திருத்தணி நகராட்சிகள், திருநின்றவூர் பேரூராட்சி மற்றும் சில ஒன்றியங்களில் 308 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதையடுத்து 308 பேரும் சிகிச்சைக்காக திருவள்ளூர், பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டனர்.

அவர்களது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இதோடு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,507 ஆக உயர்ந்துள்ளது. இதில், நேற்று ஒரே நாளில் மட்டும் 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதையடுத்து மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 105ல் இருந்து 111 ஆக உயர்ந்துள்ளது. இதனால் மாவட்ட மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். மாவட்டத்தில் இதுவரை, 3,457 பேர் சிகிச்சை முடிந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மற்ற 1,939 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

Tags : district , In the district, the epidemic has risen to 308 people in a single day
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...