×

சாலை சீரமைக்க கோரிக்கை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் பழையனூர் கிராமத்தில் கடந்த வாரம் ஒன்றிய தார் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையில் 3 மீட்டர் இடைவெளிவிட்டு பணியை செய்யாமல் ஒப்பந்ததாரர்கள் விட்டுச் சென்றுள்ளனர். இதனால் அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், இரவு நேரத்தில் கீழே விழுந்து ரத்த காயங்களுடன் வீடுகளுக்கு செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, திருவாலங்காடு  வட்டார வளர்ச்சி அலுவலரிடம் அப்பகுதி மக்கள் புகார் கொடுத்தும் சாலையை இன்னும் சரி செய்யவில்லை. ஆனால் ஒப்பந்ததாரருக்கு பணி முடிக்காமலேயே தொகை வழங்கப்பட்டுள்ளது. எனவே, விடுபட்ட சாலையை சரி செய்வதற்கான நடவடிக்கையை ஒன்றிய அதிகாரிகள் எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Road, align, demand
× RELATED மாநகரப் பேருந்துகள் நிற்காமல்...