×

கொரோனாவுக்காக தமிழக சித்த மருத்துவர் தயாரித்துள்ள 66 மூலிகைகள் கொண்ட இம்ப்ரோ சித்த மருத்துவ பொடியை மத்திய அரசு பரிசோதிக்க உத்தரவு

மதுரை : கொரோனாவுக்காக தமிழக சித்த மருத்துவர் தயாரித்துள்ள 66 மூலிகைகள் கொண்ட இம்ப்ரோ சித்த மருத்துவ பொடியை மத்திய அரசு பரிசோதிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த சித்த மருத்துவர் சுப்பிரமணியன் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை இவ்வாறு ஆணையிட்டுள்ளது. இம்ப்ரோ சித்த மருத்துவ பொடி கொரோனாவை தடுக்கும் திறன் உள்ளதாக என்பதை ஆராய்ந்து மத்திய ஆயுஷ் அமைச்சகம் ஆகஸ்ட் 3ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதே சமயம் இந்திய மருத்துவமுறையை பரிசோதிக்க போதுமான நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


Tags : Impro Siddha ,Government , Corona, Tamil Siddhanta, 66 Herbs, Impro, Medicinal Powder, Central Government, Directive
× RELATED தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும்...