சென்னை: சென்னையில் முழுமையாக ஊரடங்கு தளர்த்தப்படவில்லை என சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் கண்ணன் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். வாடகை ஆட்டோ, டாக்சிகளில் கிருமிநாசினி வைத்தருக்க வேண்டும். முக்கிய காரணம் இன்றி யாரும் வெளியே வர வேண்டாம். அரசு அறிவித்த விதிகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் எனவும் கூறினார்.