×

லாக் அப் மரணங்களை தடுக்க தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் : புதிதாக பொறுப்பேற்ற தென் மண்டல ஐஜி முருகன் உறுதி!

சென்னை : லாக் அப் மரணங்கள் தடுக்கப்பட வேண்டும் என்று தென் மண்டல ஐஜி முருகன் தெரிவித்துள்ளார். தென் மண்டல ஐஜியாக பொறுப்பேற்ற பின், முருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, லாக் அப் மரணங்களை தடுக்க தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார். மேலும் சிபிசிஐடி சிறப்பான விசாரணையை மேற்கொண்டு வருகிறது என்று குறிப்பிட்ட அவர், தலைமை காவலர் ரேவதிக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்றார்.


Tags : lock-up deaths ,Murugan ,South Zone IG , Lock up, deaths, South Zone IG, Murugan, sure
× RELATED திண்டல் முருகன் கோயிலில் ரூ.1.20 லட்சத்தில் தென்னை நார் விரிப்புகள்