×

சாலையில் நின்ற ஆட்டோவில் வாலிபர் சடலம் மீட்பு

திருவொற்றியூர்: திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் பின்புறம் தெற்கு மாடவீதி தெருவில் அடையாளம் தெரியாத வாலிபர் தெருவோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆட்டோவில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதை பார்த்த பொதுமக்கள் திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் பிணமாக கிடந்தவரை பரிசோதனை செய்தபோது அவர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு ரத்தம் வெளியேறி உயிரிழந்தது தெரியவந்தது.
இறந்தவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த ராஜா (45) என்பது தெரியவந்தது. இந்த கொலை தொடர்பாக 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


Tags : Road, Auto, Volunteer Corpse, Rescue
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...