×

பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தனி அலுவலர்களின் பதவிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு

சென்னை: பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தனி அலுவலர்களின் பதவிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. டிசம்பர் 31 வரை பதவிக்காலத்தை நீட்டிக்க மாநகராட்சி தொடர்புடைய சட்டங்களில் திருத்தம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

முதல்வரின் பரிந்துரையை அடுத்து தமிழ்நாடு நகராட்சிய சட்டத்தில் திருத்தம் செய்து அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நகராட்சிய சட்டங்கள் (மூன்றாம் திருத்த) அவசர சட்டத்தை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பிறப்பித்தார்.

தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் பதவி காலம் முடிவடைந்த நிலையில், அதற்கான தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு  உள்ளாட்சி நிர்வாகங்கள் கவனிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், தற்போது ஊரகப்பகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெற்றுள்ள நிலையில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகான சிறப்பு தனி அலுவலர்கள் பதவி மேலும் 6 மாதம் நீட்டிப்பு செய்து அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.



Tags : corporation ,municipality , Panchayat, municipality, corporation, individual officers
× RELATED மாநகராட்சி மேயர், கமிஷனர் வரிசையில் நின்று வாக்களிப்பு