×

இங்கிலாந்து, வியட்நாமில் சிக்கிய 446 பேர் சிறப்பு விமானத்தில் வருகை

சென்னை: சிறப்பு மீட்பு விமானத்தின் மூலம் இங்கிலாந்து, ஓமன், வியட்நாம் நாடுகளில் சிக்கித்தவித்த 446 பேர் சென்னைக்கு அழைத்துவரப்பட்டனர். கொரோனா ஊரடங்கால் பலர் வெளிநாடுகளில் இந்தியர்கள் சிக்கி தவிக்கின்றனர். அவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், லண்டனில் இருந்து ஏர் இந்தியா சிறப்பு விமானத்தில் 138 இந்தியர்கள் நேற்றுமுன்தினம் மாலை 6 மணிக்கு சென்னை வந்தனர். ஓமன் நாட்டில் உள்ள மஸ்கட்டில் இருந்து ஏர்இந்தியா சிறப்பு மீட்பு விமானம் 180 இந்தியர்களுடன்  நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு சென்னை வந்தது.வியட்நாமில் இருந்து ஏர்இந்தியா சிறப்பு மீட்பு விமானம் 116 இந்தியர்களுடன் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு சென்னை வந்தது. அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் 14 நாட்கள் தனிமைப்படுத்துவதற்காக, தண்டலத்தில் உள்ள தனியார் கல்லூரி விடுதிக்கும், மற்றவர்கள் சென்னையில் உள்ள தனியார் ஓட்டலுக்கும் அனுப்பப்பட்டனர்.

Tags : UK ,Vietnam , 446 people stranded in Vietnam, England, special plane, arrival
× RELATED பிரான்சில் இருந்து கடல் வழியாக...