ஆலந்தூர்: மடிப்பாக்கம் ராஜிவ் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் பிரபாவதி (47). கணவனை இழந்த இவர், சோபனா (13) என்ற தனது மகளுடன் தனியாக வசித்து வந்தார். இவர்களுக்கு செல்வராஜ் அவ்வப்போது தேவையான உதவிகளை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் செல்வராஜ் தனது மகள் வீட்டிற்கு சென்றபோது, பிரபாவதியும், சோபனாவும் ஒரே புடவையில் தூக்கிட்டு சடலமாக தொங்குவது தெரிந்தது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கணவர் இறந்த துக்கம் மற்றும் வயதான தந்தைக்கு பாரமாக உள்ளோமே என்ற மன அழுத்தம் காரணமாக பிரபாவதி, தனது மகளை தூக்கில் தொங்கவிட்டு, அதே சேலையில் தானும் தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.