×

மனைவியுடன் தகராறு கணவன் தற்கொலை

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பேருராட்சி ஜி.என்.டி சாலை பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் (38). தனியார் தொழிற்சாலையில் பணிபுரிகிறார். இவருடைய மனைவி சித்ரா. வழக்கறிஞர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.  கணவன் மனைவிக்கு இடையில் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்படுவது வழக்கம். இந்நிலையில், நேற்று மாலை கணவன் மனைவிக்கு இடையில் குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் தியாகராஜன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் படுக்கையறையில் உள்ள  மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


Tags : Husband ,suicides , wife
× RELATED தூய்மை பணியாளர்களுக்கு அரசு அறிவித்த ஊக்கத்தொகை வழங்கக் கோரி வழக்கு