×

கேரளாவில் 118 பேரை தாக்கியது

திருவனந்தபுரம்: கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கேரளாவில் இன்று (நேற்று) 118 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 68 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 36 பேர் வெளி மாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள் ஆவர். கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் 14 பேருக்கு நோய் பரவியுள்ளது. இன்று (நேற்று) 42 பேர் குணமடைந்துள்ளனர். இதையடுத்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2150 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 2015 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது கேரளாவில் பல்வேறு மாவட்டங்களிலாக 175734 பேர் வீடுகள், மருத்துவமனைகளில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Kerala , Kerala hit 118 people
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...